Sunday 23 December 2012

அடிமாடுகளும் சினையாடுகளும்

அடிமாடுகளும் சினையாடுகளும்

மாநகரங்களை நோக்கி லாரி லாரியாக மாடுகள் போகின்றன. ஆடுகள் போகின்றன. சினையாடுகளும் கூட 
நான்கு வழிச்சாலைகள் உள்ள எந்த தேசீய நெடுஞ்சாலையிலும் அன்றாடம் நள்ளிரவிலிருந்து அதிகாலை வரை நின்று, உட்கார்ந்து கவனித்துப் பார்த்தால் அவை தென்படும். மலங்க மலங்க விழிக்கும் கண்கள். ஆடுகளாகவும் மாடுகளாகவும் பிறக்க நேர்ந்த அவலத்தை அவை மௌனமாக முறையிடுவது போல் தென்படும் காட்சி அது.
அவை எங்கே போகின்றன?
முன்பின் அறியாத கசாப்புக் கடைகளில் தொடங்கி அவற்றின் பயணம் அறுசுவை விரும்பிகளின் அடிவயிற்றில் முடியப் போகின்றது.
ஆனால் அவை எந்தெந்த சூழ்நிலைகளில் எப்படி எப்படி வளர்க்கப்பட்டன? எந்த மலைக்காற்றை சுவாசித்து  எந்தக் குளம், அருவி அல்லது குழாய் நீரைப் பருகி எந்த செடி கொடிகளை உண்டு ஆளாகி இன்று மரண யாத்திரையிர் எங்கெங்கே போய்க் கொண்டிருக்கின்றன? யாராலும் சொல்ல இயலாது.
அவை விட்டுப் பிரிந்து வந்த கிராமப்புறங்கள் அவை ஏற்படுத்திய சூன்யத்தால் என்ன வகை வெறுமையை அனுபவிக்கின்றன?
எதைக் கவனிக்கவும் நேரமில்லாது பணங்காசு பார்க்கிற அவசர ஓட்டத்தில் அதை யார் பொருட்படுத்துகிறார்கள்?
எல்லோருக்கும் பணம் வேண்டும். பணம், பணம், பணம்.
அந்த மாடுகளின் கத்தும் ஓசையோ ஆடுகளின் பிளிறல்களோ அவற்றின் நடமாட்டம் உயிர் வாழ்விற்கு வழங்கும் துள்ளலும் துடிப்புமோ அவற்றின் கழிவுகளுக்கு ஏங்கும்மண்ணின் பசியோ எதுவும் யாருக்கும் கேட்பதில்லை.கொடுக்கத் துணை நின்று அவர்களை மலை விழுங்கி மகாதேவனாகி வருகிற கார்ப்பொரேட் கம்பெனிகளுக்குப் பறிகொடுத்தவர். அந்தக் கூரை வீடு மாடி வீடாகியது. மாட்டுக் கொட்டகை மண் மேடாகியது. இத்தனை நடந்தும் அவரது மூதாதையர் இழுத்துக் கட்டிய மாடுகளும் மேய்த்து வந்த ஆடுகளும் அவர் மனத்தின் அடிவாரத்திலிருந்து மறையவில்லை.
உடல் நிலை அவ்வளவாக ஒத்துழைக்கவில்லை என்றாலும் அவர் வசதி வந்த பிறகு நல்ல சிமெண்ட் தளம் போட்டு மாட்டுக் கொட்டகை கட்டி இருக்கிற ஓரிரு மாடுகளை மேய்த்துக் கொண்டு அவற்றிற்குத் தீவனம் வைத்து அவை கன்று ஈனும் போதும் குட்டி போடும்போதும் உள்ளூர மகிழ்ந்து குதூகலித்துக் கொண்டிருக்கிறார்.
சுத்தப் பைத்தியக்காரத்தனம் என்று நண்பர்கள் விமர்சிக்கிறார்கள், விடுமுறைகளில் வீட்டிற்கு வரும் பிள்ளைகள் சலித்துக் கொள்கிறார்கள். மலையடிவாரத்தின் கீழே ஹோவென்று வீசும் காற்றின் தனிமையோடு தன் தனிமையைப் பகிர்ந்து கொண்டு உடன் வாழ்கிற மனைவி வருத்தப்படுகிறார்.
அவர் விட்டுக் கொடுப்பதாக இல்லை.
எந்தப் பைத்தியக்காரத்தனத்தை யார் சொல்லி யார் விட்டு விட்டிருக் கிறார்கள்? இதுநாள் வரை.
ஒரு மாடு... ஒரே ஒரு மாடாவது... அவரது இடைவிடாத கர்மயோகத்திற்கு உதவி செய்ய ஒரே ஒரு மாடாவது என்று அலைபாயும் அவர் மனசிற்கு எப்படியாவது ஒரு மாடு கிடைத்து விடுகிறது. அது கன்று ஈன்று வம்சம் பெருக்கி விடுகிறது. அவர் தர்ம கைங்கரியமாக இதைச் செய்யவில்லை.
உயிர்களோடு உயிராக ஒன்றி வளர்ந்துவிட்ட பாந்தத்திற்காக அவற்றை வளர்க்கிறார். வயதுக்கு அவை வந்ததும் விற்று விடுகிறார். அவற்றின் பாலை வீட்டுக்குத் தேவைப்பட்டது போக விற்கவும் செய்கிறார். ஆனால் எதுவும் பணத்தை உத்தேசித்து அல்ல.
எண்ணிக்கையற்ற அடிமாடுகளையும் சினையாடுகளையும் பிரியாணிகளுக்கு அனுப்பியதால் வெறிச்சோடிப் போன கிராமத்தில் இன்னும் இந்தியாவும் கலாச்சாரம் கலாச்சாரம் என்று நாக்கு நுனியில் பேச உதவுகிற அந்த மர்மமான சரக்கின் உட்பொருள் அழிந்து போகாமல் அவர் உணர்ந்து கொண்ட அர்த்தத்தைப் போற்றிக் கொண்டிருக்கத் தான்.
அப்படி அனேகர் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். நம்பலாம் நகரம் என்ற மகாமசானத்தை நோக்கி எத்தனை அடிமாட்டு லாரிகள் போன போதிலும் கிராமம் என்றென்றும் உயிர் வாழும்.
எத்தனை ஆக்கிரமிப்புகளுக்கு மத்தியிலும் மிஞ்சியிருக்கிற இந்தியாவைப் போல.

1 comment:

  1. கிராமம் என்றென்றும் உயிர் வாழும்.
    எத்தனை ஆக்கிரமிப்புகளுக்கு மத்தியிலும் மிஞ்சியிருக்கிற இந்தியாவைப் போல.

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்...

    http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_5.html

    ReplyDelete